அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு

அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்டது.

Update: 2023-05-31 17:38 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள வீரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பருத்தி வயலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனிடம் தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் தா.பழூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்து கிடந்தவர் யார்?, அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்