விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

Update: 2023-03-07 19:26 GMT


விருதுநகர் தர்கா தெருவில் குடியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர். அவரது உறவினர் ஒருவர் தென்காசியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய நிலையில் அது தொடர்பான ஆவணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்