போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சோமாசிபாடிபுதூரில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்றார்.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடிபுதூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஒன்றியஆணையாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் (கலால்) குமரன், ஊராட்சிமன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ரெட்கிராஸ் சங்க தலைவர் இந்திரராஜன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அப்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மண்டல துணைதாசில்தார் வேணுகோபால், அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட ரெட்கிராஸ் சங்க பொருளாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிபாலன், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.