மதுகுடித்த போது தகராறு:வாலிபர் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2023-09-05 18:45 GMT

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 29). இவரும், இவரது நண்பர்களான தூத்துக்குடி கல்லம்பரும்பு பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செல்வம் (35), தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் சேர்ந்த கென்னடி மோரீயஸ் மகன் இன்பன்ட் பிரகாஷ் என்ற தம்பான் (23), தூத்துக்குடி மாதவ நாயர் காலனியை சேர்ந்த ஜெகன் மகன் டோமினிக் சாவியோ (20), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த லூர்துராஜ் மகன் அபிஸ்டன் (20), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஒரு படகில் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்பன்ட் பிரகாஷ் என்ற தம்பான், டோமினிக் சாவியோ, அபிஸ்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து மேற்படி விஜயகுமார் மற்றும் செல்வத்தை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்பன்ட் பிரகாஷ் என்ற தம்பான், டொமினிக் சாவியோ, அபிஸ்டன், இளஞ்சிறார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் இளஞ்சிறாரை நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்