செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செகந்திராபாத்தில் இருந்து இன்று மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07146) நாளை காலை 8 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07147) மறுநாள் காலை 3 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.