இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை தொடர்ந்து சிரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியது கனடா அரசு. சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்த்து, அரியணை ஏறியிருக்கும் அகமது அல்-ஷராவின் ஹெச்.டி.எஸ் அமைப்பையும் தீவிவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து கனடா அரசு நீக்கியது.
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகள் திரைப் பயணத்தை கொண்டாடும் விதமாக, அவரது பிறந்த நாளை ஒட்டி வருகின்ற 12ம் தேதி படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது - போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
டெல்லி காவல் நிலையத்தில் பொய் புகாரை கொடுத்து ஜி.கே.மணி அவதூறு பரப்புகிறார். அன்புமணி மீது அவதூறு பரப்பும் ஜி.கே.மணி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் ஜி.கே.மணி விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்-அன்புமணி தரப்பு பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது நிரந்தமராக விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், கார்த்திகை தீபத்தன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, பிற விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு அக்கட்சியின் பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.
இண்டிகோ விமான சேவை பாதிப்பு எதிரொலி 2வது நாளாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.5,400 கட்டணமாக இருக்கும் நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.18,200 ஆக உயர்ந்துள்ளது.திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 26,700 ஆகவும் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலோர மற்றும் உள் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள்
நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.