மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

Update: 2023-08-25 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு போலீசார் அண்ணா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ராஜாராமன் (வயது 26) என்பவர் தனது வீட்டில் மது பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. மேலும் காவாப்பட்டியை சேர்ந்த மீனா (53), கணபதி கொட்டாய் பகுதியை சேர்ந்த சாவித்திரி (60) ஆகியோர் வீட்டில் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 70 குவார்ட்டர் மற்றும் பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்