மது விற்ற பெண் கைது

Update: 2023-09-09 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மெணசி ஜாலிக்காடு மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 65) என்பவர் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்