காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் ஏழுமலையான்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைததிருந்த காவேரிப்பட்டணம் பூமலை நகரை சேர்ந்த தங்கவேல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 190 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.