அனுமதியின்றி வெடி தயாரித்தவர் சிக்கினார்

Update: 2022-09-27 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் அம்மனேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரசின் உரிமம் இன்றி வெடி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உரிமம் இன்றி வெடி தயாரித்த எண்ணேகொள்புதூர் அருகே உள்ள அம்மனேரியை சேர்ந்த முனிராஜ் (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 வெடி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்