புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Update: 2022-09-28 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்தி சிலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை விற்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்