பொம்மிடி அருகேவீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

Update: 2022-12-30 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விஜயநகரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விஜயா (வயது 50) என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததுடன், அவருடைய வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த சாக்குப்பையில் ஒரு கிலோ மற்றும் 150 கிராம் தூளாக்கப்பட்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விஜயாைவ கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்