வெடிப்பொருட்கள் விற்றவர் கைது

இண்டூர் அருகே வெடிப்பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-29 16:09 GMT

பாப்பாரப்பட்டி:

தர்மபுாடி மாவட்டம் இண்டூர் அருகே நத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நத்தஅள்ளியில் வாணவெடிகள், பட்டாசு கடை வைத்து விற்பனை செய்து வந்தார். இதனையடுத்து அவரது கடையில் இண்டூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்