காவிரி-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு

காவிரி-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-08-04 18:16 GMT

நங்கவரம் பேரூராட்சி அலுவலகத்தில் காவிரி-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டம் குறித்து இனுங்கூர் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவிரி-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்ட தனி வட்டாட்சியர் அமுதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இனுங்கூரை சுற்றியுள்ள விவசாயிகள் மத்தியில் நிலம் கையாகப்படுத்தல் சம்பந்தமாக கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அனைத்து விவசாயிகள் சம்பதம் தெரிவித்தனர். இதில் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வெங்கடேஷ், முதுநிலை வருவாய் அலுவலர் பெரியசாமி, இனுங்கூர் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்