கள்ளக்குறிச்சியில்பெண் மீது தாக்குதல் :4 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-13 18:45 GMT


கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 22). இவர் ஜல்லி கான்கிரிட் போடும் கூலி வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வெங்கடேசன் என்பவர் சின்னதுரை மனைவி சங்கீதா என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிகிறது. இ தை பார்த்த சிவரஞ்சனி ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது, அவரை வெங்கடேசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சிவரஞ்சனியின் உறவினர்களை வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசன், அவரது தரப்பை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வராஜ், ஆனந்தன் மனைவி ஜெயந்தி, சண்முகம் மனைவி குஷ்பு ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்