பெண் மீது தாக்குதல்; 2 பேர் கைது

திருப்புல்லாணி அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-27 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மேற்கு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்பவரின் மனைவி பிரபாவதி (வயது 31). இவருக்கும் திருப்புல்லாணி வடக்குத்தெரு கருப்பையா மகன் ரவி (41) என்பவருக்கும் திருப்புல்லாணி கோவில் வாசலில் தேங்காய், பழம் விற்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரபாவதி தனது கணவர் மற்றும் குழுந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது ரவி தரப்பினர் கல்லால் தாக்கினார்களாம். இதில் கார் கண்ணாடி சேதமடைந்ததோடு பிரபாவதி, அவரது கணவர் மோகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரபாவதி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து திருப்புல்லாணி அங்குச்சாமி மகன் ராஜ்குமார் (39), வழுதூர் ராஜபாண்டியன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக ரவி (41), குமார் (45), முத்து (40), ஜெகன் (35) ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்