கும்பக்கரை அருவியில்2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்வரத்து சீராகாததால் கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

Update: 2023-04-29 18:45 GMT

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாய் குளித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது.

இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நீர்வரத்து சீராகாததால் நேற்றும் 2-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்