டிரைவர் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

களக்காடு அருகே டிரைவர் உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-08-12 05:07 IST

களக்காடு:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு குளம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் மனோஜ்குமார் (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஆவின் பாலகத்தில் டிரைவராக உள்ளார். இவருக்கும், கீழ உப்பூரணி நடுத்தெருவை சேர்ந்த பால்ராஜ் (42) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பால்ராஜ், அவரது மகன்கள் பவுல்தாஸ், பவுல்பெடஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் சேர்ந்து மனோஜ்குமாரை கீழே தள்ளி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த வினோத்குமார், ராபின், அஸ்வின் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பால்ராஜ், அவரது மகன்கள் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்