சமையல் தொழிலாளியை தாக்கிபணம், செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்

சமையல் தொழிலாளியை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-10 02:16 IST


மதுரை ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் நாகமணி (வயது 51). சமையல் தொழிலாளி. இவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மேலபெருமாள்  மேஸ்திரி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து பணம், செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். நாகமணி கொடுக்க மறுத்ததால் அவரை அவர்கள் இருவரும் சரமாரியாக தாக்கி விட்டு செல்போன், பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திடீர்நகர் மேலவாசலை சேர்ந்த விக்னேஷ் (28), சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்