ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2023-06-17 21:00 GMT

சின்னமனூர் கருங்கெட்டாங்குளத்தை சேர்ந்த கலைபாண்டி மகன் அய்யனவேலு (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அய்யனவேலு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யனவேலுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளீஸ்வரி (30). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காளீஸ்வரி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காளீஸ்வரி இறந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்