3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-21 21:30 GMT

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 19-ந்தேதி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நீர்வரத்து சீராகாததால் நேற்று 3-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்