நாமக்கல் மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்

Update: 2023-03-01 19:00 GMT

சேந்தமங்கலம்:

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. எனவே கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்