பா.ஜனதா திண்ணை பிரசாரம்

சங்கரன்கோவிலில் பா.ஜனதா திண்ணை பிரசாரம் நடந்தது.

Update: 2022-11-24 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் ராஜபாளையம் ரோடு மற்றும் தெருக்களில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்து கூறி பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்தனர். நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. அணி தலைவர் சாய்சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரம் செய்தார். இதில் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்