பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடு்த்தனர்.

Update: 2022-11-10 19:08 GMT

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து கலெக்டரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், திருமயம் கடியாப்பட்டியில் தந்தை மகன் இருவரும் பலரிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்