தூக்கில் வாலிபர் பிணம்

கோட்டூர் அருகே வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

Update: 2022-08-06 18:32 GMT

கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் தினேஷ் (வயது24). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை மன்னார்குடி -கோட்டூர் இடையே செம்மொழி நகரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தினேஷ் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்