கால்வாயில் வாலிபர் பிணம்

பழனி அருகே கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-05-28 19:30 GMT

பழனி ராமநாதன்நகரில் சாலையோர கால்வாயில் வாலிபர் பிணமாக கிடப்பதாக பழனி அடிவாரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தது பழனி அடிவாரத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாலமுருகன் (வயது 22) என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பாலமுருகன் இறந்தாரா?, அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்