மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் புத்தகங்கள்

மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-02-11 18:45 GMT

மானாமதுரை, 

சிவகங்கையில் புத்தகத் திருவிழாவில் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சார்பாக ரூ.1½ லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டன. இந்த புத்தகங்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சார்பாக மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் படித்து பயன்பெறுவதற்காக வழங்கப்பட்டது. விழாவில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் ரேவதி பாலன், மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கினார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிசங்கர், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்