வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-27 18:42 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகம் அருகே குடியிருந்து வருபவர் ஜெயலட்சுமி(வயது 68). சத்துணவு திட்டத்தில் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்திஸ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்