உடல் கருகிய நிலையில் பெண் பிணம்

கருங்கல் அருகே உடல் கருகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.

Update: 2023-08-20 18:45 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே உடல் கருகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் இளந்தோட்டவிளையை சோ்ந்தவர் குமாரதாஸ். கேரளாவில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் ஸ்ரீதேவி நேற்று மதியம் தனது வீட்டின் அருகே குப்பையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாயார் லீலா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீதேவி நோயினால் அடிக்கடி மயங்கி விழுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குப்பையை எரித்து கொண்டிருந்த போது தீயில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்