மின்சாரம் பாய்ந்து இறைச்சி கடை உரிமையாளர் பலி

மின்சாரம் பாய்ந்து இறைச்சி கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

Update: 2022-11-24 21:17 GMT

திருவெறும்பூர்:

பரிதாப சாவு

திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகரை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் கிஷோர்(வயது 30). இவர் ஜெய் நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று வியாபாரம் முடிந்த பின்னர் கடையை கழுவிவிட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கிஷோருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் பாய்ந்து இறைச்சிக்கடை உரிமையாளர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்