சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-09-23 19:12 GMT

திருச்சுழி,

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருச்சுழி

திருச்சுழியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல திருச்சுழி அருகே பாறைக்குளம் வெள்ளியம்பலநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு 9 வகையான பொருட்காளால் அபிஷேகம் நடைபெற்றது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாத்தூர்

சாத்தூரில் உள்ள சிவன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், இருக்கன்குடியில் உள்ள கைலாசநாதர் கோவில், கோல்வார்பட்டி சிவன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்