இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-19 23:27 IST

இலுப்பூர் அருகே பாக்குடியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் ஜோதிகா (வயது 20). இவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோபால் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிகாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்