பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-30 19:46 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுதகுமார். இவரது மனைவி தேவி (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் மலர்மன்னன் (46). உறவினர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தேவியிடம் மலர் மன்னன் சொத்தில் பங்கு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மலர்மன்னன், அவரது மனைவி சின்ன ஆயா (38), தந்தை விஸ்வநாதன் (67) ஆகியோர் தேவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தேவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தேவி அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பெண்ணை தாக்கிய மலர்மன்னன், சின்ன ஆயா, விஸ்வநாதன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்