3 பேர் மீது வழக்கு

சுவர் இடிப்பு; 3 பேர் மீது வழக்கு

Update: 2022-08-03 22:07 GMT

வடக்கன்குளம்:

பழவூர் அருகே சிதம்பராபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் செல்லத்துரை (வயது 42). இவர் கடை கட்டுவதற்காக சுவர் எழுப்பி உள்ளார். அந்த சுவரை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (55), அவருடைய மனைவி சுவர்ண பாய் (50), உறவினர் இசக்கியப்பன் மனைவி கீதா (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து இடித்து தள்ளினர். இதுகுறித்து செல்லத்துரை பழவூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மணிகண்டன், சுவர்ண பாய், கீதா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்