கல்லூரி மாணவர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு

கல்லூரி மாணவர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

Update: 2023-08-04 20:29 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (வயது 19). இவர் மதுரையில் பி.எஸ்.சி.நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அவரிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அஸ்வின் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருபவர் கார்த்திக் (21). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று கார்த்திக்கிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்