சென்னை: 40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் - சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Update: 2023-06-19 11:20 GMT

சென்னை

சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு அவசியம் என கூறினார். மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்