சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
நாங்குநேரி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேவகன்குளத்தில் சிறுமியை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.