கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

கச்சிராயப்பாளையம் அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலியானான்.;

Update:2023-06-04 00:15 IST

கச்சிராயப்பாளையம்:

கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் ஜெயராணி பலராமன். இவருடைய மகன் கனல்கண்ணன்(வயது 15). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கிணற்றில் குளிக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கனல்கண்ணன் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கிணற்றுக்கு சென்று பார்த்தபோது, கனல்கண்ணன் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்