பரமத்திவேலூரில் ரூ.10.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.10.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Update: 2023-06-15 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை 11 ஆயிரத்து 3 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.79.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.79-க்கும், சராசரியாக ரூ.73.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 92 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.75.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.73.12-க்கும், சராசரியாக ரூ.63.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்து 220-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்