தர்மபுரி அங்காடியில் ரூ.2 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

Update: 2023-10-17 19:00 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.459-க்கும், குறைந்தபட்சமாக ரூ.265-க்கும், சராசரியாக ரூ.365.95-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 683-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்