155330 என்ற டெலிபோன் எண்ணில்மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்கலெக்டர் தகவல்

மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை 155330 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-10 18:45 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் குறித்த விபரங்கள் மற்றும் சந்தேகங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் 155330 என்ற தொலைபேசி எண் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் போன் செய்து மேற்கண்ட திட்டங்களின் விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

திட்ட விவரங்கள், பயிற்சிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுதல் மற்றும் பெறுதல் ஆகியவை குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

மேலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்

அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின்போது வழங்கப்படும் வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களையும் பெறலாம். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 155330 என்ற எண்ணிற்கு போன் செய்து உரிய தகவல்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்