தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை

தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்;

Update:2023-06-04 00:15 IST

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் வழங்கப்படுகிறது. நகல் குடும்ப அட்டைகள் கேட்டு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை

பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்