நகராட்சி பூங்கா பணிகளை கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் நகராட்சி பூங்கா பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-26 18:18 GMT

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பணிகளை விரைந்து முடிந்து பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்