டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

Update: 2023-04-29 18:45 GMT

கடலூர்

" மே" தினத்தையொட்டி நாளை(திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 பார்கள் மூடப்பட வேண்டும். மே தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்-3 மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்