கல்லூரி மாணவர் லாரி மோதி பலி

கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானார்.

Update: 2023-01-13 18:05 GMT

தூசி

கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா அரசாணைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் நந்தகோபால் (வயது 18) உத்திரமேரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப ஏழ்மையை போக்க இவர் பகுதி நேர வேலைக்காக லாரியில் கிளீனராக சென்று வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் லாரியில் கிளீனர் வேலைக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் லாரியில் சென்றபோது வயிற்று உபாதை ஏற்படவே லாரியை நிறுத்த செய்தார்.

சிறிது தூரம் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நந்தகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு காஞ்சீபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்

அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகோபால் இறந்து விட்டார். இது குறித்து தந்தை ராமதாஸ் புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்