திண்டிவனம் அருகேசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-07-03 18:45 GMT

பிரம்மதேசம், 

திண்டிவனம் அருகே உள்ள அழகியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் யுவராஜ் (வயது 23). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் முருக்கேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டார். திண்டிவனம் அடுத்த வெள்ளகுளம் கூட்டு சாலை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் யுவராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்