கல்லூரி மாணவி மாயம்

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவி மாயமானாா்.

Update: 2023-04-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மகள் தேவி(வயது 19). இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு அரசு கலைக் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரியில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்தார். அதன் பிறகு தேவி, வீட்டிற்கு வரவில்லை. அபரது செல்போனும் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்