கல்லூரி மாணவர் தற்கொலை

சங்கரன்கோவிலில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-12 21:55 GMT

சங்கரன்கோவில் கணபதி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 18), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பிரகாஷ் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரகாஷ் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்