பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காவேரிப்பட்டணம் பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-18 18:45 GMT

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் செயல் அலுவலர் செந்தில்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்