106 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

106 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-11 18:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகன் சிலம்பரசன் (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சிலம்பரசன் வேலை பார்க்கும் கல்குவாரியில் பாறாங்கற்களை உடைப்பதற்கு ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பற்ற முறையில் அனுமதியின்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லெம்பலக்குடி கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப்பதிந்து, அவரிடமிருந்து 106 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்